மணமகனுக்கு 10 ரூபாய் நோட்டை எண்ண தெரியாது எனக்கூறி திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணின் தைரீயம் அப்பகுதியில் இருக்கும் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருமண நிகழ்வுகள்
திருமணம் என்பது பலரால் ஒன்று சேர்க்கப்பட்ட மணமக்களை ஒன்றுச்சேர்க்கப்படும் ஒரு கலாச்சார நிகழ்வாகும். இதன்போது திருமணத்திற்கு வரும் இருவீட்டாரின் நண்பர்களின் சேட்டைகள் அன்றைய நாள் அதிகமாக இருக்கிறது.
மேலும் இந்த கலாட்டாக்கல் உச்சத்திற்கு செல்லும் பட்சத்தில் அந்த கல்யாணம் நிற்கும். இதன்படி, உத்தர பிரதேசத்தின் ஃபருக்காபாத் பகுதியைச் சேர்ந்த ரீட்டா சிங் என்ற பெண் கடைசி நேரத்தில் தன்னுடைய திருமணத்தை நிறுத்தி அந்த பகுதியில் இருக்கும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நடத்தையில் மாற்றம்
இதனை தொடர்ந்து திருமணச் சடங்குகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது மாப்பிளை நடத்தையில் சற்று வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த புரோகிதர் (Priest) பெண் வீட்டாரிடம் இந்த விடயம் குறித்து தெரியப்படுத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் மாப்பிளைக்கு சில போட்டிகள் வைத்து மாப்பிளையின் நிலைமையை ஆராய்ச்சிச் செய்ய முடிவு செய்துள்ளார்கள். அந்தவகையில் முதல் டெஸ்ட்டாக மாப்பிளைக்கு 30 ரூபாய்க்கான மூன்று 10 ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதனை எண்ணுக் கூறுமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.
இந்த நோட்டுக்களை கொடுத்துமு் மாப்பிளை எண்ண முடியாமல் திணறியிருக்கிறார். இதனை பார்த்துக் கொண்டிருந்த மணப்பெண் ரீட்டா உடனே மணமேடையிலிருந்து இறங்கிச் சென்றுள்ளார். இது குறித்து மாப்பிளை வீட்டார்கள் மணப்பெண்ணை பேசிக் கொடுத்தவரிடம் விசாரித்துள்ளார்கள்.
திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
அப்போது “ மாப்பிளை கொஞ்சம் பலவீனமாக இருப்பதாக priest கூறினார். இதனால் தான் நாங்கள் சோதித்தோம். அவர் கூறியப்படி மாப்பிளை சற்று பலவீனமாக தான் இருக்கிறார். இவரின் செயலை பார்க்கும் போது நம்பிக்கையின்மை ஏற்படுகிறது.
இது போல் ஒருவரை திருமணம் செய்துக் கொள்ள மணப்பெண் விரும்பவில்லை” என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இரவீட்டாருக்கும் வாய்த்தர்க்கள் அதிகரித்துக் கொண்டே சென்றதால் போலிஸார் விரைந்து பிரச்சினை முடிக்க முயற்சித்துள்ளார்கள்.
மேலும் மணப்பெண் குறித்த விடயத்தை போலிஸாருக்கு தெளிவுப்படுத்திய காரணத்தால் அங்கிரந்து போலிஸார் நகர்ந்துச் சென்றுள்ளாரகள்.
இந்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்ட வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் “இதற்காகவா திருமணத்தை நிறுத்தப்பட்டது” என அதிர்ச்சியான கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.