பொலிஸ் வாகனம் மோதியதில் 23 வயது பெண் உயிரிழப்பு!

0
298

அமெரிக்காவில் உள்ள சவுத் லேக் யூனியனில் சியாட்டில் பொலிஸ் ரோந்து வாகனம் மோதியதில் 23 வயது இந்திய வம்சாவளி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திங்கள்கிழமை இரவு பொலிஸ் ரோந்து வாகனம் மோதியதால் பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் ஹார்பர்வியூ மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டார்.

உயிரிழந்தவர் ஜாஹ்னவி கந்துலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். கிங் கவுண்டி மருத்துவ பரிசோதகர் அலுவலகத்தின்படி, மரணத்திற்கான காரணம் கடுமையான காயங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜான்ஹவி கந்துலா ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் சவுத் லேக் யூனியனில் உள்ள வடகிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் பயின்று வருகின்றார்.

இந்த டிசம்பரில் முதுகலைப் பட்டம் பெறுவதற்கும் தயாராக இருந்துள்ளார். ரோந்து வாகனத்தை செலுத்திய அதிகாரி டெக்ஸ்டர் அவென்யூ நோர்த் வடக்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தார்.

பெண் பாதசாரி குறுக்குவழியில் கிழக்கிலிருந்து மேற்காகக் கடந்து கொண்டிருந்தபோது வாகனம் அவர் மீது மோதியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரியின் பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் அவர் நவம்பர் 2019 முதல் திணைக்களத்தில் இருப்பதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்துலாவின் மரணம் பலாத்கார வழக்காக விசாரிக்கப்படாது என்றும், அதிகாரி விடுப்பில் வைக்கப்படவில்லை என்றும் காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இலங்கை மாணவர்கள் விபத்து உள்ளிட்ட காரணங்களினால் பலரும் உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில், கடந்த நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கார் மரத்தில் மோதியதில் ஆந்திராவைச் சேர்ந்த 27 வயது மாணவர் சாய் ரோஹித் பலடுகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், மோசமான வானிலை காரணமாக தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து கம்பத்தில் மோதியதில் 17 வயதுடைய இந்தோ-கனடிய மாணவர் ஒருவர் கடந்த 16ம் திகதி உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.