மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடைமைகளான வைரம், தங்கம், விலையுயர்ந்த புடவைகள், செருப்புகள் உள்ளிட்டவற்றை பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதன்படி, 468 வகையான வைரம், ரூபி, மரகதம், முத்து, ரத்தினம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள், தங்க நகைகள், 700 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.11,344 மதிப்பிலான விலை உயர்ந்த புடவைகள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 44 குளிர்சாதன இயந்திரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார நாற்காலிகள், 81 தொங்கு விளக்குகள், 20 சோபா செட்கள், 250 சால்வைகள், 12 குளிர்பதன பெட்டிகள், 10 தொலைக்காட்சிப் பெட்டிகள், 8 சி.வி.ஆர் கருவிகள், 140 வீடியோ கேசட்டுகள், 1 வீடியோ கேமரா, 4 வீடியோ பிளேயர்கள், 1,040 வீடியோ கேசட்கள், 24 டேப் ரெக்கார்டர்கள், 3 இரும்பு லாக்கர்கள், 33 தொலைபேசிகள் ஆகியவை ஏலம் விடப்பட உள்ளன.