உலர் பழங்களில் சத்துக்களை இரட்டிப்பாக பெற வேண்டுமா? இதை செய்யுங்கள்..

0
324

ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள உலர் பழங்களை அதிகமாக குளிர் காலங்களில் சாப்பிடுவதற்கான காரணங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

உலர் பழங்கள்

குளிர் கலங்களில் இந்த உலர் பழங்களை சாப்பிட்டால் நல்லது என்று நிபுணர்கள் கூறிவரும் நிலையில், இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், புரதங்கள், தாதுக்கள் இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை சூடாகவும் வைத்துள்ளது.

இவ்வாறு பல நன்மைகளை அளிக்கும் இவற்றினை அப்படியே சாப்பிடாமல் ஊறவைத்து சாப்பிட்டால் இரண்டு மடங்கு சத்துக்களைப் பெறலாம். ஆம் இரவில் தண்ணீர் ஊற்றி அதில் உலர் பழங்களை ஊறவைத்து, காலையில் அவற்றினை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், செரிமான பிரச்சினை, அழகை அதிகப்படுத்தவும் செய்கின்றது.

ஊறவைத்து சாப்பிட வேண்டிய உலர் பழங்கள்

இரும்புச்சத்து, போலேட், வைட்டமின் பி 12, வைட்டமின் டி, வைட்டமின் ஈ என சத்துக்களை கொண்ட பாதாமை இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டால், இதய ஆரோக்கியத்தை அளிப்பதுடன், சருமத்தினை பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றது. ஆனால் இவற்றினை தோலை நீக்கிவிட்டு தான் சாப்பிட வேண்டும்.

உலர் பழங்களில் சத்துக்களை இரட்டிப்பாக பெற வேண்டுமா? அப்போ இந்த தவறை செய்யாதீங்க | Soaked Dry Fruits Benefits In Tamil

முடி உதிர்வு பிரச்சினை, மாதவிடாய் வலி, ஹீமோகுளோபினை அதிகரித்தல் என பல வழிகளில் நமக்கும் நன்மைகளை அளிக்கும் கருப்பு திராட்டையையும் நீங்கள் இரவில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.

இதே போன்று நினைவாற்றலையும், மலரச்சிக்கல், இருமல் பிரச்சினையிலிருந்து விடுவிக்கும், வால் நட்ஸையும் இரவில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்ஃ

ஊற வைத்த அக்ரூட் பருப்பு, குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவை குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்தும்.

அத்திப்பழத்தினையும் இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் நீங்குவதுடன், நாள்முழுவதும் புத்துணர்வுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கலாம்.