பீர் குடித்துக்கொண்டு பைக் ஓட்டி வந்த நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், காஜியாபாத்தில் டெல்லி-மீரட் விரைவு சாலையில் இளைஞர் ஒருவர் பீர் குடித்துக் கொண்டு பைக்கில் தில்லா சென்று கொண்டிருந்தார்.
இதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்தனர்.
தற்போது இந்த வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய அந்த நபருக்கு போலீசார் 31 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.