கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் (ஐருளுகு) ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட செயற்பாட்டாளருமான வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.