முன்னாள் காதலனை சந்திக்க சென்ற 19 வயது தாய்; காருக்குள் இருந்த குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

0
245

முன்னாள் காதலனை சந்திப்பதற்காக ஹோட்டல் அறைக்கு சென்ற தாய் ஒருவர், தனது குழந்தையை காரிலேயே வைத்து பூட்டி விட்டு சென்ற நிலையில், அந்த குழந்தை மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் காதலனுடன் சந்திப்பு

கொலம்பியாவின் வல்லேடுப்பரில்(Valledupar) உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் மரியா கமிலா மெங்குவல் மோஜிகா என்ற 19 வயது இளம் தாய் ஒருவர், தனது முன்னாள் காதலன் ஹம்பர்டோ மானுவல் ஒலிவில்லா பினெடாவை(23) சந்திப்பதற்காக வந்துள்ளார்.

குழந்தையுடன் வந்து இருந்த தாய் கமிலா மெங்குவல்(19) காரிலேயே குழந்தையை விட்டுச் செல்ல திட்டமிட்டு, கார் அதிக வெப்பம் அடையாமல் இருக்க காரின் ஏர் கண்டிஷனிங்-கை ஆன் செய்துவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக காரின் ஏர் கண்டிஷனிங் அமைப்பு தவறான வாயுவை காரின் உள்ளே பரப்பியதால் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது.

சந்திப்பை முடித்து விட்டு காருக்கு திரும்பிய இருவரும் காரில் வாயு சூழ்ந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர், மேலும் காருக்குள் இருந்த வாயு புகை மிகவும் வலுவாக இருந்ததால் அவர்கள் இருவரும் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை

முன்னாள் காதலனை சந்திக்க சென்ற தாய்: மூச்சுத் திணறி காருக்குள் இருந்த குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம் | Colombia Mum Left Baby To Choke To Death In Car

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தீவிர விசாரணையை தொடங்கினர், குழந்தையின் தடயவியல் பரிசோதனையில் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் இறந்தது உறுதி செய்யப்பட்டது.  

முன்னாள் காதலனை சந்திக்க சென்ற தாய்: மூச்சுத் திணறி காருக்குள் இருந்த குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம் | Colombia Mum Left Baby To Choke To Death In Car

குழந்தையின் தாய் மற்றும் அவரது முன்னாள் காதலன் இருவரும் கைது செய்து செய்யப்படவில்லை, ஆனால் அவர்களை போலீசார் விசாரித்தனர் என்று உள்ளூர் ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.