பிரான்சில் இளைஞரை திடீரென கடத்திய குழு!

0
253

பிரான்ஸில் இளைஞன் ஒருவரை நால்வர் கொண்ட குழு ஒன்று கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Villeparisis (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள தேவாலயம் ஒன்றின் முன்பாக காலை 9 மணி அளவில் மகிழுந்து ஒன்றில் காத்திருந்த சிலர் வீதியில் நடந்து சென்ற இளைஞன் ஒருவரை திடீரென வழிமறித்து தாக்குதல் நடத்தினர்.

பின்னர் கட்டாயப்படுத்தி இளைஞனை மகிழுந்துக்குள் ஏற்ற முற்பட்டனர். முதலில் இளைஞன் அவர்களிடம் இருந்து தப்பித்துள்ள போதும் அவர்கள் துரத்திச் சென்று இளைஞனை மீண்டும் பிடித்து மகிழுந்துக்குள் தள்ளி உள்ளனர்.

அதன் பின்னர் இளைஞனை கடத்திக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

மேற்படி சம்பவத்தை வீதியில் நின்ற சிலர் தொலைபேசியில் படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

கடத்தல்காரர்கள் நால்வர் இருந்ததாகவும் அவர்களிடத்தில் நீண்ட குழல் கொண்ட துப்பாக்கி ஒன்றும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி காணொளியை ஆதாரமாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.