தமிழகத்தில் பிரபலமாக தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜ்ய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
சுமார் 95 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் எலிமினேஷனில் ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
மேலும், கடந்த வாரம் இடம்பெற்ற Ticket To Finale டாஸ்க்கில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர்.
அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிக் பாஸ் 6 சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் நடைபெற்றது. இப்படி பரபரப்பான சம்பவங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், புதிய ப்ரோமோ காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் வீட்டுக்குள் வந்திருக்கும் விஜே பார்வதி மற்றும் விஜே ஷோபனா ஆகியோர் போட்டியாளர்களை நேர்காணல் செய்கின்றனர்.
அப்போது அமுதவாணனிடம் பேசும் விஜே ஷோபனா,” கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் விளையாட ஆரம்பிச்சிட்டீங்க. ஏன் இடையில எமோஷனுக்கு இடம்கொடுத்தீங்க?” எனக் கேள்வி எழுப்புகிறார்.
இதற்கு பதில் அளிக்கும் அமுதவாணன்,”மற்ற விடயங்களை விடுங்க. ஜனனி விடயத்தை தெளிவு பண்ணுங்க. மக்கள் சார்பா தான் நான் கேக்குறேன்” என்கிறார்.
தொடர்ந்து விக்ரமனிடம் பேசும் பார்வதி, “தான் அரசியல் சார்ந்து இருப்பதாலேயே ஒரு ஹெட் மாஸ்டர் பிஹேவியர் உங்ககிட்ட இருக்கு. என்ன சொல்றிங்க?” எனக் கேட்கிறார். தொடர்ந்து அங்கிருக்கும் திரையில் விக்ரமன் பற்றிய மீம் ஒன்றும் திரையிடப்படுகிறது.
அதில்,”ஒன்னு தூங்க வேண்டியது, இல்லைன்னா கொற சொல்ல வேண்டியது” என குறிப்பிடப்பட்டு அதற்கு தகுந்தாற்போல புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
இதை கண்ட விக்ரமன் ‘ஐயையோ’ என சிரிக்க, “இது ஒரு சீரியஸ் நோட்டும் கூட” என்கிறார் பார்வதி. இப்படி அதிரடி திருப்பங்களுடன் நிகழ இருக்கிறது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி.