யாழில் ஆலயத்தின் பிரதமகுருவின் சடலம் தூக்கில் தொங்கி நிலையில் மீட்பு!

0
352

தூக்கில் தொங்கிய நிலையில் ஆலயத்தின் பிரதமகுரு உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் யாழ் வடமராட்சி பருத்தித்துறை தம்பசிட்டி பண்டாரி அம்மன் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ சபாரத்தின தேசிகர் உயிரிழந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

கோவில் பிரதமகுரு இன்று காலையில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் ஆலயத்தின் பிரதமகுருவின் சடலம் தூக்கில் தொங்கி நிலையில் மீட்பு | Dead Body Of The Headmaster Of Jaffna Temple

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

உயிரிழந்த பிரதம குரு நீண்டகாலமாக இவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்ததாக தெரியவருகின்றது.