கிளிநொச்சியில் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி!

0
227

அண்ணன் தம்பிக்குயிடையில் தொலைபேசியால் ஏற்பட்ட சண்டை விவகாரம் காரணமாக தம்பியால் அண்ணனை கத்தியால் குத்திய பொழுது சம்பவயிடத்திலே அண்ணன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு 1/4 பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கொடூரம்! | Today S Brutality In Kilinochchi

3 பிள்ளைகளின் தந்தை

 37 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான தருமராசா தவசீலன் என்பவரே இறந்தவர் ஆவார்.

உயிரிழந்தவரின் சடலம் தருமபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக பாரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தருமபுரம் பொலிஸாரல் கைது  செய்யப்பட்டுள்ளதுடன்  சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை   பொலிஸார்  மேற்கொண்டுவருகின்றனர்.