கொக்குவில் பொல்பதி வீதியில் உள்ள தனியார் காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களஞ்சியத்தை தோண்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த பகுதியினை தோண்டும் பணி இன்று திங்கட்கிழமை (9) காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கொக்குவில் பொற்பதி வீதியில் விடுதலைப்புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து நீதிமன்ற உத்தரவை பெற்றே அவ்விடத்தை தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டது.