சஜித் பிரேமதாச எப்போதும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார்; பாலித ரங்கே

0
461

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எப்போதும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு சஜித் பெரிய சவாலில்லை

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேருந்து ஓட்டுவதில்லை என்பதால், சஜித் பிரேமதாச அவருக்கு பெரிய சவால் இல்லை.

சஜித் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார்-ஐ.தே.கட்சி | Sajith Will Not Contest Presidential Election Unp

ஜனாதிபதியை தெரிவு செய்யும் போட்டியில் ஒதுங்கிக்கொண்ட சஜித்

சஜித் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார்-ஐ.தே.கட்சி | Sajith Will Not Contest Presidential Election Unp

அத்துடன் சஜித் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய தேசியக்கட்சி கூடுதல் கவனங்களை செலுத்துவதில்லை. எதிர்க்கட்சித் தலைவரான சஜித் எப்போது தீர்மானகரமான தேர்தல்களில் போட்டியிட மாட்டார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தில் ஆரம்பத்தில் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்.

இறுதியில் டலஸ் அழகப்பெருமவை முன்நிறுத்தி விட்டு ஒதுங்கிக்கொண்டார். எதிர்காலத்திலும் இதுவே நடக்க போகிறது எனவும் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.