வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்த பேருந்து; ஒருவர் பலி; 15 பேர் காயம்!

0
328

வேக கட்டுப்பாட்டை இழந்த அரச பேருந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி குறித்த விபத்து நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தே இவ்வாறு பளை முள்ளையடி பகுதியில் விபத்துக்குள்ளானது.

வேககட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியிலே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், பேருந்தில் பயணித்த மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதுடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.