10 மாத குழந்தையை ஓடும் காரில் இருந்து தூக்கி எறிந்த கொடூரர்கள்!

0
401

தன்னுடைய 10 மாத குழந்தையுடன் மகராஷ்டிரா, தானே என்ற மாவட்டத்தில் பெல்ஹர் பகுதியில் இருந்து போஷ்ரி என்ற பகுதிக்கு செல்ல பெண் ஒருவர் வாடகை கார் புக் செய்து அதில் பயணித்துள்ளார்.

அந்த வாடகை காரில் சில பயணிகள் இருந்துள்ள நிலையில் குழந்தையுடன் அந்த காரில் அப்பெண் பயணித்துள்ளார்.

இந்நிலையில் கார் மும்பை அகமதாபாத் நெடுஞ்சாலையில் பல்ஹர் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது காரில் இருந்த பயணிகளும் கார் ஓட்டுனரும் அப்பெண்னை வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர்.

இதற்கு அப்பெண் எதிர்த்ததால் அப்பெண்ணின் 10 மாத குழந்தையை ஓடும் காரில் இருந்து தூக்கி வெளியே வீசி அந்த பெண்ணையும் காரில் இருந்து வெளியே வீசியுள்ளனர்.

இதில் 10 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் பாதிக்கப்பட்ட அப் பெண் படுகாயமடைந்துள்ளார்.

மேலும் இந் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.