யாழில் 200 வருடங்கள் பழமையான மலைவேம்பு சரிந்தது…

0
446

யாழ்.கச்சோி வீதியில் இருந்த சுமார் 200 வருடங்கள் பழமையான மலைவேம்பு சீரற்ற காலநிலையினால் அடியோடு சாய்ந்துள்ளது. குறித்த நேற்று இரவு 11 மணியளவில் சரிந்து விழுந்ததால் அருகில் இருந்த வீட்டு மதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதன் காரணமாக கச்சேரி நல்லூர் பிரதான வீதியானது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதோடு விழுந்த மரத்தினை அகற்றும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

யாழில் வேரோடு சாய்ந்த 200 ஆண்டுகள் பழமையான மரம்!(video) | A 200 Year Old Tree Rooted

200 வருடங்கள் பழமை வாய்ந்த மரம்

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்,

200 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த மரத்தினை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் பாதுகாக்க தவறியமையினால் விழுந்துள்ளதாக கூறியுள்ளார்.

யாழில் வேரோடு சாய்ந்த 200 ஆண்டுகள் பழமையான மரம்!(video) | A 200 Year Old Tree Rooted

இரவில் மரம் விழுந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்த அவர், இது பகல் வேளையிலோ அல்லது சன நடமாட்டம் நிறைந்த நேரத்தில் இடம் பெற்று இருந்தால் உயிர் சேதங்களும் ஏற்பட்டிருக்கும் எனவும் சுட்டிக்காடினார்.

யாழில் வேரோடு சாய்ந்த 200 ஆண்டுகள் பழமையான மரம்!(video) | A 200 Year Old Tree Rooted

அத்துடன் வீட்டின் மதிலில் இந்த மரம் விழுந்துள்ளதால் இந்த வீட்டு உரிமையாளருக்குரிய நஷ்டஈட்டினை சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.