போதனா வைத்தியசாலையில் திடீரென ஏற்பட்ட தீ!

0
267

காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ தற்போது முற்றாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவின் இரண்டாவது மாடியில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கேன் அறையில் நேற்று பிற்பகல் தீ பரவியுள்ளது.

குளிரூட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் தீ பரவியவுடன் காலி மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ​​சிகிச்சை பிரிவில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 100க்கும் மேற்பட்ட நோயாளிகளை பத்திரமாக கீழ் தளத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தீ விபத்தால், ஸ்கேன் செய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் உட்பட பல பொருட்கள் சேதமடைந்துள்ளன.