பஸ் மோதியதில் 23 வயது இளைஞன் பலி!

0
432

கொழும்பு வெள்ளவத்தையில் நேற்று மாலை தனியார் பஸ் மோதியதில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

பழைய ஹெவ்லொக் வீதியில், மாயா அவென்யூ ரவுண்டானாவில் இருந்து பாமன்கடை சந்தியை நோக்கிச் சென்ற துவிச்சக்கர வண்டியில், தனியார் பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பேருந்தின் சாரதி சைக்கிளில் பயணித்தவரை இரட்டை பாதையில் முந்திச் செல்ல முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காயங்களுக்கு உள்ளான சைக்கிள் ஓட்டுநர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர். பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.taatastransport.com/