அவனை நான் யூஸ் பண்ணுனேன்! பிக்பாஸ் ராபர்ட் குறித்து வனிதா..

0
2784

பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள ராபர்ட் மாஸ்டர் குறித்து வனிதா ஓபனாக பேசிய விடயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிக்பாஸ்

பிரபல ரிவியில் கடந்த 9ம் தேதி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 19 பேர் இருக்கின்றனர். ஜிபி முத்து தனது மகனுக்காக தானாக வெளியேறியதையடுத்து, சாந்தி மாஸ்டர் மக்களல் வெளியேற்றப்பட்டார்.

ஜிபி முத்து உள்ளே நுழைந்த நாள் முதல் வெளியேறிய நாள் வரை அவருக்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்த ரசிகர்களே அதிகம். அதனை ஈடுகட்ட பயங்கரமான டாஸ்க்கை கொடுத்து பார்வையாளர்களை பிக்பாஸ் பிடித்து வைத்துள்ளது.

இந்த 21 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் தான் ராபர்ட் மாஸ்டர். இவர் வனிதாவுடன் சில வருடம் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ராபர்ட் குறித்து வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல கருத்துக்களை வெளியிட்டு வரும் வனிதா, பிக்பாஸ் வீடா இது பீச்சா… போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக சுற்றுகின்றனர்.

குறிப்பா ராபர்ட் மாஸ்டரை பார்த்து ரச்சிதா ஹாலிவுட் ஹீரோ என்பதும், அவரு ரச்சித்தாவை செல்லமா ‘முக்குதி’ என்று வர்ணித்துகிட்டே இருக்கிறார். இதையும் ஜாடையாக பேசியுள்ளார்.

நானே இதற்காகத் தான் அவனை யூஸ் பண்ணுனேன்! ராபர்ட் குறித்து வனிதா உடைத்த உண்மை | Bigg Boss Robert Master Vanitha Open Talk

அதே போன்று நிவாஷினி அசல் கோளாறு நண்பர்கள் மாதிரியா உள்ளே நடந்து கொள்கின்றனர். மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவது நடந்து கொள்கின்றனர் என்றும் ஸ்ட்ராங்கான போட்டியாளராக இருக்கும் மகேஸ்வரியை வெளியே அனுப்ப வேண்டும் என்ற நினைக்கின்றனர்.

மேலும் ராபர்ட் மாஸ்டர் குறித்து கூறுகையில், அவன் என்ன என்ன புருஷனா அல்லது பாப் பிரண்ட்டா? நானே பப்ளிஸிட்டிக்காக அவனை யூஸ் பண்ணுனேன் என்று உண்மையை உடைத்துள்ளார். 

அதுமட்டுமில்லாமல் அவனுக்கு 2007ல் திருமணம் ஆனதாகவும், குழந்தை ஒன்று இருப்பதாக கூறி தற்போது சிங்கிளாக இருக்கிறேன் என்று சிம்பதியை ஏற்படுத்தி வருகிறான். ஆனால் நான் இதுவரை அவனது குழந்தை மற்றும் மனைவியை பார்த்ததே இல்லை என்று வனிதா கூறியுள்ளார்.

https://www.taatastransport.com/