கனடாவில் கோர தீ விபத்து; நான்கு சிறுவர்கள் பரிதாப பலி!

0
377

கனடாவில் இடம் பெற்ற கோர தீ விபத்து சம்பவத்தில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் வின்னிபிக் பகுதியில் குயின்ஸ் டே என்னும் இடத்தில் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தீ விபத்தில் 41 வயதான பெண் 62 வயதான ஆண் மற்றும் 13 வயதான பெண் ஆகியோர் உயிர் பிழைத்து உள்ளனர்.

நான்கு சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் தீ விபத்து ஏற்பட்டவுடன் கீழ் மாடியில் இருந்த குறித்த மூன்று பேரும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மேல் மாடியில் இருந்த நான்கு சிறார்களும் தீ விபத்தில் சிக்கிக்கொண்டு உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் இடம் பெற்ற கோர தீ விபத்து சம்பவம்; நான்கு சிறுவர்கள் பலி | 4 Children Killed In Thompson Man House

தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நான்கு சிறார்களும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் கடுமையான காயங்கள் காரணமாக அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்த சிறார்கள் உறவினர்களுக்கு கனடிய போலீசார் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 4, 7, 9 மற்றும் 10 வயதான சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

https://www.taatastransport.com/