நயனின் இரட்டை குழந்தைகள் விவகாரத்தில் இப்படி ஒரு ரகசியமா… வெளியானது அறிக்கை!

0
436

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நடிகை நயன் தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9 ஆம்தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 மாதமாகிய நிலையில் சில தினங்களுக்கு முன் தங்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் தகவலை வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.

இரட்டை குழந்தை

இதுகுறித்து விதிகளை மீறி தம்பதியினர் இரட்டை குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றனர் என்ற புகாரின் பேரில் கடந்த அக்டோர்பர் 13 ஆம் தேதி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களால் உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்து விசாரித்தனர். புகாரின் அடிப்படையில் தனியார் மருத்துவமனையில் செயற்கை தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலம் நயன்தாரா குழந்தையை பெற்றுக்கொண்டுள்ளனர். தற்போது விசாரனை குழு தகுந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

சுகாதாரத்துறையின் அறிக்கை

அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், வழிகாட்டு நெறிமுறைகள் முறையான ஆவணங்கள் வைத்திருந்து, விதிகளை மீறி இரட்டை குழந்தையை பெறவில்லை என்றும் மருத்துவமனை ஆவணங்களை பராமறிக்கவில்லை என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தம்பதிகள் மற்றும் வாடகை தாய், ICMR வழிகாட்டு முறைகளின்படியே குழந்தைகளை பெற்றுள்ளனர்! என்று தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனையை மூடவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Gallery
Gallery
Gallery