யாழில் 60 கிலோ கேரள கஞ்சா மீட்பு

0
481

யாழ்ப்பாணம்-மாதகல் பகுதியில் சுமார் 60 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று அதிகாலை 2 மணியளவில் மாதகல் கடற்கரையோரமாக குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

படகொன்றும் மீட்பு

இதன்போது கேரள கஞ்சாவை கடத்த பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் படகொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் படகு என்பன இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரும் இராணுவ புலனாய்வுப்பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.