நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் – யாழில் துண்டுப் பிரசுரங்கள்

0
494

“நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்” எனும் தலைப்பிலான அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்தது.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் தேசிய மக்கள் சக்தியினரால் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் க.இளங்குமரன், நல்லூர் தொகுதி அமைப்பாளர் கே.சரவணன் உட்பட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.