6 வருடங்களுக்கு முன்பே பதிவுத்திருமணம்; எதிர்பார்க்காத ட்விஸ்ட்

0
900

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும், தங்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

வாடகை தாய் மூலம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில், பல்வேறு சர்ச்சைகள் சுற்ற தொடங்கியது.

இந்த பிரச்னை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் விசாரணை குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.

 நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

6 ஆண்டுகளுக்கு முன்பே ரகசிய திருமணம்! ஆதாரங்களால் அதிர்ச்சியான ரசிகர்கள் - யாரும் எதிர்பார்க்காத ட்விட் | Nayanthara Got Married 6 Years Back

6 ஆண்டுகளுக்கு முன்பே ரகசிய திருமணம் 

இந்த விசாரணையின் போது இருவரும் விசாரணை குழுவிடம் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.

பின்னர் தங்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாகவும், கடந்த டிசம்பர் மாதமே வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

6 ஆண்டுகளுக்கு முன்பே ரகசியமாக பதிவு திருமணம் செய்துகொண்டுள்ள ட்விஸ்டை கண்டிப்பாக ரசிகர்கள் எதிர்பார்க்க வில்லை.

6 ஆண்டுகளுக்கு முன்பே ரகசிய திருமணம்! ஆதாரங்களால் அதிர்ச்சியான ரசிகர்கள் - யாரும் எதிர்பார்க்காத ட்விட் | Nayanthara Got Married 6 Years Back

மேலும் இவர்கள் சமர்ப்பித்த ஆதாரங்களும், வாடகை தாய் குழந்தை விவகாரத்திற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாகவே உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருவரும் பெற்றோர் ஆனதாக கூறிய அதிர்ச்சியில் இருந்தே இன்னும் சில ரசிகர்கள் மீளாத நிலையில், 6 வருடத்திற்கு முன்பே திருமணம் நடந்ததாகவும் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.