17 வயது சிறு­வனை திரு­மணம் செய்ய கடத்தி சென்ற ஈராக் யுவதி!

0
495

ஜோர்டானில் இருந்து ஈராக்கிற்கு 17 வயது இளைஞனை கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் 30 வயது ஈராக் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யேமனைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒரு­வ­னையே இப்பெண் கடத்­தி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. மேற்­படி சிறுவன் தனது குடும்­பத்­தி­ன­ருடன் ஜோர்­தானில் தங்­கி­யி­ருந்தான்.

சமூக வலைத்­தளம் மூலம் இச்­சி­று­வ­னுடன் நட்­பாக இருந்த மேற்­படி யுவதி பின்னர் அவனை ஈராக்கின் தலை­நகர் பாக்­தாத்­துக்கு கடத்திச் சென்­ற­தாக உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

17 வயது சிறு­வனை திரு­மணம் செய்ய கடத்தி சென்ற யுவதி! | Young Woman Who Kidnapped 17 Year Old Boy To Marry

இச்­சி­று­வனை திரு­மணம் செய்­வதே இப்­பெண்ணின் நோக்­க­மாக இருந்­தது எனக் கூறப்­ப­டு­கி­றது.

செல்­வந்த குடும்­பத்தைச் சேர்ந்த இச்­சி­று­வனை திரு­மணம் செய்தால் அக்­கு­டும்­பத்தின் செல்­வத்தை அனுப்­பிக்­கலாம் என இப்பெண் எண்­ணி­யி­ருந்தார் என தகவ­ல­றிந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­த­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

இச்­சி­றுவன் குறித்து பாது­காப்புப் படை­யி­ன­ருக்கு தகவல் கிடைத்­த­தை­ய­டுத்து, அச்­சி­று­வனை விடு­விக்­கப்­பட்­டுள்ளான்.

மேற்­படி சிறுவன் எவ்­வாறு பாக்தாத் நகரை வந்­த­டைந்தான், எவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­டி­ரு­ந்தான், இப்பெண் தனியாக செயற்பட்டாரா அல்லது வேறு எவரும் உதவினார்களா என்பது குறித்து ஈராக்கிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர.