அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று கூடிய கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
அதற்கமைய அடுத்த நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.