ஆயுத பூஜையில் ஸ்மாட் போனை வைத்து வழிபாடு; இளைஞன் செய்த வித்தியசமான செயல்!

0
483

இந்து மக்களால் அனுஷ்டிக்கப்படும் நவராத்திரி விரதம் 9 நாட்கள் நடைபெறும். இந்த வருடத்துக்கான பூஜை வழிபாடுகள் இன்றைய தினத்துடன் (05-10-2022) முழுமையாக நிறைவுக்கு வருகிறது.

நேற்றைய தினம் (04-10-2022) ஆயுத பூஜை என்று சொல்லப்படும் வழிபாடு இடம்பெற்றது.

இந்தப் பூஜையில் கல்வி கற்கும் மாணவர்கள் தமது கற்றல் உபகரணங்கள், அதே போன்று வேலைக்குச் செல்வோர் தமக்குரிய உபகரணங்களை வைத்து வழிபடுவர்.

தற்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ஸ்மாட் போனில் கேம் விளையாடுவது மோகமாக மாறி விட்டது.

இந்த நிலையில் நேற்றைய ஆயுத பூஜை வழிபாட்டில் கேம் ஒன் செய்யப்பட்ட நிலையில், குறித்த ஸ்மாட் போன் சாமி அறையில் ஆயுத பூஜைக்காக வைத்து வழிபாடு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.