ரஷ்ய – உக்ரைன் போர்: எலோன் மஸ்க் பதிவால் சர்ச்சை

0
403

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில் போர் நிறுத்தம் குறித்து எலான் மஸ்கின் ருவிட்டர் பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 8 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையிம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தொடர்ந்து நடந்து வரும் போரால் இரு தரப்பு இராணுவ வீரர்களும் உயிரிழந்து வருவதுடன் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் நாட்டின் லுஹான்ஸ்க், டோனர்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா உள்ளிட்ட பிராந்தியங்களை கைப்பற்றியுள்ள ரஷ்யா அவற்றை தனது நாட்டுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட எலான் மஸ்க்,

”இந்த போரில் அமைதியை ஏற்படுத்தி ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட 4 பிராந்தியங்களில் ஐ. நா சபை கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் முடிவுகளின் படி போரில் இரு தரப்பும் அமைதியை ஏற்க வேண்டும்” என்றுள்ளார்.

அத்துடன், ‘க்ரைமியா மற்றும் டான்பாஸ் பிராந்திய மக்கள் தாங்கள் ரஷ்யா அல்லது உக்ரைன் ஆகிய இரு நாடுகளில் எந்த நாட்டுடன் இருக்க விரும்புகிறார்கள்” என வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பொது வாக்கெடுப்பு நடத்தலாம் என்ற யோசனையை முன்வைத்துள்ளார். 

இதற்கு உக்ரைனிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எலான் மஸ்கினது ருவிட்டர் பதிவினை தொடர்ந்து  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தமது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பதிவில்,

ரஷ்ய உக்ரைன் போர்: எலான் மஸ்க் பதிவினால் எழுந்த சர்ச்சை | World Zelenskiy Hits Back Elon Musk Sets Twitter

“உங்களுக்கு எந்த எலான் மஸ்க்கை பிடிக்கும்? ரஷ்ய ஆதரவு எலான் மஸ்க்கா? அல்லது உக்ரைன் ஆதரவு எலான் மஸ்க்கா?” என கேட்டுள்ளார்.

தன் மீதான விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க் “உக்ரைனால் போரில் வெல்ல முடியாது. ரஷ்யாவின் படைபலம் 3 மடங்கு பெரியது. இந்த போரால் உலக நாடுகளும் பெரிதும் பாதிக்கப்படும். போரை விட பேச்சுவார்த்தை, பொது வாக்கெடுப்பில் தீர்வு காணும் சுமூக முறை சிறப்பானதாக இருக்கும்” என கூறியுள்ளார்.