உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) பிராந்திய பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களுக்கு விருதுகளை வழங்கியுள்ளார்.
கார்கிவ் விடுதலையிலும், மைகோலைவ் மற்றும் சபோரிஷியா உள்ளிட்ட பல பகுதிகளின் பாதுகாப்பிலும் பிராந்திய பாதுகாப்புப் போராளிகள் எவ்வாறு ஈடுபட்டுள்ளனர் என்பதை ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) குறிப்பிட்டார்.
கார்கிவ் பிராந்தியம், குறிப்பாக, போடோலியா மற்றும் கியேவ் ஒப்லாஸ்ட்டில் இருந்து பிராந்திய பாதுகாப்பு இராணுவப் பிரிவுகளால் விடுவிக்கப்படுகிறது, என்று அவர் கூறினார்.
பிராந்திய பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இது நமது தேசிய பாதுகாப்பின் சிறந்த அடித்தளம் என்றும் அவர் கூறினார்.