இலங்கை மத்திய வங்கி பிணை முறிகளை விற்பனை செய்யத் திட்டம்

0
446

இலங்கை மத்திய வங்கி பெருந்தொகை பிணை முறிகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, சுமார் 145000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பிணை முறிகள் வெளியிடப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த பிணை முறிகள் 2025, 2028 மற்றும் 2032 காலாவதியாகும் வகையில் மூன்று பிரிவுகளாக விற்பனை செய்யப்பட உள்ளன.

இதேவேளை, 40000, 35000 மற்றும் 70000 மில்லியன் ரூபா பெறுமதியான பிணை முறிகள் மூன்று கட்டங்களாக விற்பனை செய்யப்படயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! | Important Information About The Central Bank