30 பயணிகளுடன் குடைசாய்ந்த பேருந்து !

0
555

அனுராதபுரத்தில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று நேற்று (27) இரவு கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டுஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

6 பேர் மருத்துவமனையில்

கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்த பேருந்து; 30 பயணிகளின் நிலை என்ன? | A Bus That Lost Control And Overturned

விபத்தின் போது பேருந்தில் சுமார் 30 பயணிகள் பயணித்துள்ளதுடன், காயமடைந்த 06 பயணிகள் ஹிகுராக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பேருந்து சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.