ரணிலின் பெயர் நீக்கம்; உயர்நீதிமன்றம் தீர்மானம்

0
308

நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கை தொடர முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற குழு பிறப்பித்துள்ளது.

ரணிலின் பெயரை நீக்க உயர்நீதிமன்றம் தீர்மானம் | High Court Regarding The President Easter Attack

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க, புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத்தவறியதாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.