இன்று அதிகாலை வடிகான் ஒன்றிலிருந்து நிறை மாத சிசு மீட்பு !

0
427

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஷன் வட்டகொட பகுதியிலுள்ள வடிகான் ஒன்றிலிருந்து நிறை மாத சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை இன்று சனிக்கிழமை (24-09-2022) அதிகாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

அதிகாலை வடிகானிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை! | Child Rescued Alive From Vatican In Talawakelle

குறித்த வீதியூடாக சென்ற சிலர் சிசுவை கண்டு பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.

பின்னர் சிசு லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குறித்த சிசு உயிருடன் இருப்பதாக வைத்திய சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகாலை வடிகானிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை! | Child Rescued Alive From Vatican In Talawakelle

சிசுவை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

சிசு தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதிகாலை வடிகானிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை! | Child Rescued Alive From Vatican In Talawakelle

சம்பவத்துடன் தொடர்புடைய தாய் இனம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் திருமணமாகாத 21 வயதுடைய பெண் ஆவார்.

இவர் வட்ட கொடை கீழ் பிரிவை வசிப்பிடமாக கொண்டவர் என்றும் சிகிச்சைகளுக்காக அவரை தற்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கொட்டக்கலை பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி சுதர்சன் தெரிவித்தார்.