இலங்கைக்காக உழைக்க விரும்புவோருக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்கான தேர்தலுக்கு தற்போது சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக நடிகை தமிதா அபேரத்ன (Damitha Abeyratne) தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நாட்டைப் பற்றி இன்னும் சிந்திக்கும் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் குறைவு. இருப்பினும், நாடாளுமன்றத்திற்கு வெளியே பல புத்திஜீவிகள் உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை தனக்கு நேர்ந்த அநீதியால் அரசியலுக்கு வருவது தொடர்பில் முடிவெடுக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரமாக நிற்கும் போது அவ்வளவு அதிகமாக தாக்கப்படுகிறோம்.
இந்த நிலையில் அரசியலுக்கு எவ்வாறு செயற்பட்டு வர முடிவு செய்தால் எவ்வாறு செயற்படவேண்டும் தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று தமிதா தெரிவித்துள்ளார்.