வவுனியா மாவட்டத்தின் பெயரை “வவுனியாவ” என குறிப்பிட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டமை தொடர்பில் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
வவுனியா நகரசபையை மாநகர சபையாக தரம் உயர்த்த 2022-09-06 ஆம் திகதிய 2296/05 இலக்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வரலாற்று பிறழ்வு
இதன் ஆங்கில வடிவத்தில் தற்போதைய வவுனியா நகர சபையை வவுனியா மாநகர சபையாக தரம் உயர்த்தப்படுகின்றது என்பதற்கு பதிலாக “வவுனியாவ” நகர சபையை “வவுனியாவ” மாநகர சபையாக தரம் உயர்த்தப்படுகின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்று ரீதியாக வவுனியா என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அதனை மாற்றுவது தவறு மட்டுமல்லாமல் வரலாற்று பிறழ்வு என சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் அதனை உடனடியாக திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு சீ.வி.கே.சிவஞானம் கடிதம் எழுதியுள்ளார்.