இலங்கை அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

0
391

அரச உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை தயாரிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன குறிப்பிட்டார். பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்லும்போது சேலை, ஒசரியா அல்லது அலுவலகத்திற்கு ஏற்ற உடை அணியலாம் என்று ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சிலர் சுற்றறிக்கையின் முதல் பகுதியை மாத்திரம் அமுல்படுத்துவதாகவும், பொருத்தமான அலுவலக ஆடை என்றால் என்ன என்பதை மறந்து விட்டதாகவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சுற்றறிக்கை 

எனவே, தகுந்த அலுவலக உடையை அனுமதிக்க வேண்டும் என புதிய சுற்றறிக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டு, விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமைச்சரவை அமைச்சின் கீழ் ஒதுக்கப்படும் ஒதுக்கீடுகள், இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பான செலவுகளுக்கு உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! | Important About Government Officials

கடந்த 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்ட அரசாங்க அமைச்சர்களுக்கு தனியான வரவு செலவு திட்டம் எதுவும் இல்லை என நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் ஏற்கனவே சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி, இராஜாங்க அமைச்சர்களின் செலவினங்களை, சம்பந்தப்பட்ட அமைச்சரவை அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளில் இருந்து இயன்றவரை பயன்படுத்த வேண்டும் என நிதியமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அவ்வாறு செய்ய முடியாத சந்தர்ப்பங்களில், தேசிய வரவு செலவுத் திணைக்களத்திடம் மேலதிக ஒதுக்கீடுகள் கோரப்பட வேண்டுமென நிதியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.