தென் மாகாணத்தில் ஒரு மாணவருக்காக இயங்கும் 57 பாடசாலைகள்

0
292

தென் மாகாணத்தில் கா.பொ.த உயர் தர வகுப்புக்களில் ஒரு மாணவன் மாத்திரம் கற்கும் பாடசாலைகள் சுமார் 57 காணப்படுவதாக தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலிகமகே தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு மாணவனுக்காக உயர்தர வகுப்பு பாடநெறிகளை கற்பிக்க ஆறு, ஏழு ஆசிரியர்களை அமர்த்த வேண்டியுள்ளது.

ஒரு மாணவருக்காக  இயங்கும் 57 பாடசாலைகள் | Schools Run For One Student

ஆளுநர் விடுத்த கோரிக்கை

இப்படியான பாடசாலைகளில் கற்கும் உயர்தர மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அண்மையிலுள்ள பிரபல பாடசாலைகளில் கல்வியைத் தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கல்விக்காக பௌதீக மற்றும் மனித வளங்களைப் பயனுள்ள விதத்திலும் ஆசிரியர்களை சமநிலைப்படுத்தலும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாணவருக்காக  இயங்கும் 57 பாடசாலைகள் | Schools Run For One Student

மேலும், 20 – 30 மாணவர்கள் உயர்தரம் கற்கும் பாடசாலைகள் சுமார் 300 அளவில் உள்ளன. இப் பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளதெனவும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.