ராணியின் முடியிலுள்ள திருட்டு வைரத்தை திருப்பிக் தாருங்கள்: வலுக்கும் குரல்கள்!

0
658

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் இறுதிச் சடங்கு லண்டன் நகரில் இடம்பெற்றது. உலகின் கவனத்தை பிரம்மாண்ட இறுதி அஞ்சலி ஈர்த்துக் கொண்டிருக்கும் சூழலில் தென்னாபிரிக்காவில் இருந்து இங்கிலாந்து நோக்கி பல குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. சர்வதேச கவனத்தையும் அவை ஈர்த்துள்ளன.

அரச குடும்பத்தின் பாரம்பரிய நகைகளில் ஒன்றான செங்கோலில் உள்ள வைரத்தை திருப்பி அளிக்குமாறு அந்தக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. கிரேட் ஸ்டார் ஒஃப் ஆபிரிக்கா என்றழைக்கப்படும் இந்த வைரத்திற்கு கல்லினன் எல் (Cullinan l) என்ற பெயரும் உண்டு.