இன்று காலை களனிவெளியில் இடம்பெற்ற கோரவிபத்து!

0
239

இன்று காலை களனிவெளி புகையிரத பாதையில் பகிரிவத்தை, தெல்கந்த ரயில் நிலையத்திற்கு அருகில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

ரயில் கடவையை கடக்கும்போது குறித்த கார் ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இன்றுகாலை இடம்பெற்ற கோரவிபத்து! | Horrible Accident This Morning

பெண் ஒருவர் காயம்

விபத்தில் காரில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவிஸ்ஸாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த கார் மோதியுள்ளது.

புகையிரதத்துடன் மோதிய கார் சில மீட்டர்கள் முன்னோக்கிச் சென்று பெங்கிரிவத்த புகையிரத நிலையத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் கார், இரண்டு தொலைபேசி கம்பங்கள் மற்றும் புகையிரதத்தின் மின் விளக்கு ஒன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்த மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  களனிவெளி ரயில் பாதையின் ரயில் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.