போதையில் தாக்குதல்; மாமனார் மற்றும் பதின்ம வயது சிறுவன் உயிரிழப்பு

0
408

கல்கமுவ பிரசேத்தில் மண்வெட்டியால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 16 மற்றும் 67 வயதான இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் நபர் நேற்று(20) காலை முதல் மது அருந்திவிட்டு வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திய நிலையில், மாலையில் மனைவியின் தந்தை மற்றும் அயல் வீட்டில் வசித்த உறவு முறை சிறுவனொருவனுடனும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

போதையில் கொலைவெறித்தாக்குதல்;  மாமனார் மற்றும்  பதின்ம வயது சிறுவன் உயிரிழப்பு | Two People Were Killed

சம்பவ இடத்தில் உயிரிழப்பு

இதன்போது சந்தேகநபரால் மண்வெட்டியால் தாக்கப்பட்ட மனைவியின் தந்தையான 67 வயதான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

அத்துடன் 16 வயது உறவு முறை சிறுவன் பலத்த காயமடைந்த நிலையில் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

போதையில் கொலைவெறித்தாக்குதல்;  மாமனார் மற்றும்  பதின்ம வயது சிறுவன் உயிரிழப்பு | Two People Were Killed

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.