பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) இலங்கைக்கு வந்த போது தங்கியிருந்த பங்களா தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது.
ராணி பங்களா
குறித்த பங்களா மின்னேரியா பகுதியில் உள்ளது. இது ராணி பங்களா என அழைக்கப்படும். இது வரலாற்று சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் அக்கட்டடத்தை சீரமைப்பு செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்தால் அதன் மூலம் அரசாங்கத்திற்கு ஓரளவு வருமானம் கிடைக்கும் என பிரதேச மக்கள் கூறுகின்றனர்.