பிரித்தானிய மகாராணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலி!

0
425

மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு (Queen Elizabeth II) அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று நேற்று (17-09-2022) வவுனியாவில் இடம்பெற்றது.

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகையிலேயே குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மாகாராணியின் திருவுருவ படத்திற்கு தீபமேற்றி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.