தந்தை மகன் உயிரிழப்பு; பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்

0
384

பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தந்தையும் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோகமான சம்பவம் கேகாலை ரங்வல ஜபுன்வல பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், மகன் தற்கொலை செய்து கொள்வதை கண்ட தந்தையும் ரசாயனம் ஒன்றை குடித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வேதனையில்  தந்தை விபரீத முடிவு

இந்த ஆண்டு சாதாரண தர முடிவுக்காக காத்திருந்த 17 வயது மாணவர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உயிரை மாய்த்து கொள்வதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தையும் பொலிசார் மீட்டுளளனர். உயிரிழந்த மாணவனின் தந்தை பொற்கொல்லர் என கூறப்படுகின்றது.

ஒரேவீட்டில் இருவர் உயிரிழப்பு; பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம் | Two People Died In The Same House

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், குடும்பத்தில் இரண்டாவதாக இருந்த தனது மகன் உயிரை மாய்த்துக் கொள்வதைக் கண்டு மனவேதனையில் பொற்கொல்லரில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருளைக் குடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

53 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்த நிலையில், சம்பவம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.