இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!

0
550

ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி​யை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அணித்தலைவர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 72 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணி சார்ப்பில் பந்துவீச்சில் தில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்களையும் சாமிக கருணாரத்ன மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 174 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

174 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 174 ஓட்டங்களை எடுத்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்ப்பில் குசல் மென்டிஸ் 57 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 52 ஓட்டங்களையும் மற்றும் தசுன் ஷானக ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.