கனேடிய தொலைக்காட்சி ஒன்றில் நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருந்த பெண் செய்தியாளரின் வாய்க்குள் ஒரு ஈ நுழைந்தது. செய்திக்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக அதை விழுங்கிவிட்டார் அவர்.
நேரலையில் செய்தி வாசிக்கும்போது வாய்க்குள் நுழைந்த ஈயால் வைரலாகியிருக்கிறார் ஒரு கனேடிய பெண் செய்தியாளர்.
பாகிஸ்தானில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய பெருவெள்ளம் குறித்த செய்தி ஒன்றை நேரலையில் வாசித்துக்கொண்டிருந்தார் Global News செய்தியாளரான Farah Nasser.
அப்போது திடீரென அவரது வாய்க்குள் ஒரு ஈ நுழைய, செய்திக்கு இடைஞ்சல் வராத வகையில் சட்டென அதை விழுங்கிவிட்டு சகஜமாக செய்தியைத் தொடர்ந்தார் Farah.
பின்னர் Farah ட்விட்டரில் தான் ஈயை விழுங்கும் வீடியோவை வெளியிட்டு என்ன செய்வது நம்மெல்லாருக்கும் சிரிப்பதற்கு ஒரு காரணம் தேவைப்படுகிறது என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford, செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது இரண்டு தேனீக்களை விழுங்கிய விடயம் கவனம் ஈர்த்த நிலையில் தற்போது செய்தியாளரான Farah ஈயை விழுங்கிய விடயம் கவனம் ஈர்த்துள்ளது.