சீனாவின் நடவடிக்கைகளால் பெரும் அச்சத்தில் இந்தியா!

0
419

சீனாவின் புதிய ‘இந்தியப் பெருங்கடல் திட்டம்’ இந்தியாவை குறிவைக்கிறதாக தெரிவிக்கப்படும் நிலையில் அதுகுறித்த பிரத்யேக செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் சீனா தனது ராணுவ தளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

இதன் முதல் கட்டமாக வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடான ஜிபூட்டியில் சீனா கடந்த 2016-ம் ஆண்டு சுமார் 4700 கோடி செலவில் கடற்படை தளத்தை அமைக்கும் பணியை தொடங்கியது.

சீனாவின் நகர்வுகளால் பெரும் அச்சத்தில் இந்தியா! | India In Great Fear Of China S Moves

பாப்-எல்-மண்டேப் ஜலசந்தி

இது ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் மற்றும் காவலர்களை பிரிக்கும் மூலோபாய பாப்-எல்-மண்டேப் ஜலசந்தியில் அமைந்துள்ளது. $590 மில்லியன் செலவில் 6 ஆண்டுகளாக நடந்த இந்த பணி தற்போது முடிவடைந்து உள்ளதாகவும் இதையடுத்து இந்த கடற்படை தளம் முழுமையாக செயல்பட தொடங்கி இருக்கிறது.

பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் பலமான கட்டமைப்பை இது கொண்டுள்ளது. எந்தவித நேரடி தாக்குதலையும் தாங்கும் வகையில் இந்த கடற்படைதளம் வடிவமைக்கப்பட்டுஉள்ள நிலையில் இது சீனாவின் முதல் வெளிநாட்டு ராணுவதளம் ஆகும்.

சீனாவின் நகர்வுகளால் பெரும் அச்சத்தில் இந்தியா! | India In Great Fear Of China S Moves

இந்திய பெருங்கடலில் நிலை நிறுத்தப்பட்டு உள்ள சீனாவின் போர்க்கப்பல்களுக்கு இது உதவியாக இருக்கும் என கூறப்படுகின்றது.

இதற்கான செயற்கைகோள் படங்கள் வெளியிடப்பட்டு உள்ளதுடன் இந்த ஜிபூட்டி கடற்படை தளம் மூலம் சீனா தனது ராணுவ படைகளை நிலை நிறுத்தவும், எதிரி நாடுகளை உளவு பார்க்கவும் பயன்படுத்த உள்ளதாக தெரிகிறது.

இலங்கைக்கு வந்த உளவுக் கப்பல்

இதன் காரணமாக இந்திய வான்வெளி பரப்பில் உள்ள செயற்கை கோள்களை சீனா நேரடியாக கண்காணிக்கும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. அதேவேளை ஏற்கனவே இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் உளவுக்கப்பல் இலங்கை வந்துள்ளது.

சீனாவின் நகர்வுகளால் பெரும் அச்சத்தில் இந்தியா! | India In Great Fear Of China S Moves

இந்த சூழ்நிலையில் சீனா முதல் முறையாக வெளிநாட்டில் கடற்படைதளத்தை அமைத்து உள்ளதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.

அதுமட்டுமல்லாது வருங்காலத்தில் உலகம் முழுவதும் நட்பு நாடுகளிலும் தன்னுடைய ராணுவ தளத்தை அமைப்பதற்கு சீனா திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.