கேரளாவில் 59 வயது தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்!

0
471

இந்தியாவின் கேரளாவில் விதவையான தனது தாயாருக்கு மகளொருவர் இரண்டாவது திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையை இழந்த தாய்

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன்(59). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தனது இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி விட்டதால் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.

தாயாரின் தனிமையான வாழ்க்கையை அவதானித்த மகள் பிரசிதா, தாய்க்கு ஒரு துணை வேண்டும் என்றும் அதனால் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்து மணமகனை தேட ஆரம்பித்துள்ளார்.

59 வயதில் தாய்க்கு இரண்டாவது திருமணம்

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த திவாகரன்(63) என்பவர் மனைவியை இழந்து வாழ்ந்துவந்துள்ள நிலையில், இவரை தனது தாய்க்கு திருமணம் செய்து வைக்க பிரசிதா முடிவு செய்துள்ளார். திவாகரன் இரண்டு மகள்களுக்கு தந்தை மட்டுமின்றி வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

அவரிடம் சென்று பிரசிதா தாயை குறித்து பேசியதோடு, அவரது இரண்டு பெண்களிடமும் பேசி இரண்டாவது திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து இறுதியில் தாயின் தனிமையை போக்கி இரண்டாவது திருமணமும் செய்து வைத்துள்ளார். குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.