தாயை காப்பாற்ற சென்ற 5 வயது சிறுவன் பலி!

0
588

தமிழகத்தில் தாயாரை காப்பாற்ற முயன்ற 5 வயது சிறுவ ன் உயிரிழந்த சம்பவம் ஒன்றும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே தெற்கு குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அர்ச்சனா. வாய் பேச முடியாதவர், இந்த தம்பதிக்கு கார்த்திக் ராஜா (5), சுபாஷ் (3) என்ற 2 மகன்கள். இந்த நிலையில் நேற்று இரவு அர்ச்சனா சமையல் கட்டில் சமையல் செய்து கொண்டிருருந்துள்ளார்.

இதன்போது, வீட்டு சுவரின் அருகில் இருந்த சிறிய ஓட்டையில் நல்ல பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த சிறுவன் பாம்பு தனது தாயை கடித்து விடக்கூடாது என்பதற்காக அதனை விரட்ட முயற்சி செய்து உள்ளார். ஆனால் நல்ல பாம்பு அச்சிறுவனை கடித்து விட்டது.

இதில் அச்சிறுவன் கார்த்திக் ராஜா மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு கடம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கடம்பூர் போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுமதித்துள்ளனர்.

தாயை காப்பாற்ற  சென்ற  5 வயது  சிறுவனுக்கு நேர்ந்த பெரும் துயரம்! | A5 Year Old Boy Who Went To Save His Mother Died

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயைக் காப்பாற்ற வேண்டும் முயற்சி செய்த சிறுவன் பாம்பு கடித்து உயிர் இழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.