32 வயதான மார்கா பொட்லைன் (Marka potline) எனும் யுவதி டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார்.
இவர் 13 வயதான மாணவனுடன் வகுப்பறையில் வைத்து தகாத முறையில் உறவு கொண்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாணவன் 13 வயது சிறுவனாக இருந்தபோது ஆசிரியை துஷ்பிரயோகம் ஆரம்பித்ததாகவும் 3 வருடகாலம் இது தொடர்ந்ததாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை வகுப்பறையிலும் ஆசிரியை தன்னுடன் தகாத முறை உறவில் ஈடுபட்டதாக அதிகாரிகளிடம் அம் மாணவன் தெரிவித்திருந்தார். மேற்படி மாணவனுக்கு தற்போது 16 வயதாகுகிறது.
மேற்படி ஆசிரியை விவாகரத்து செய்த பின்னர் அம்மாணவன் வசித்த குடியிருப்புத் தொகுதியில் மார்கா பொட்லைன் (Marka potline) குடியேறியிருந்துள்ளார்.
முன்னாள் மாணவன் ஒருவன் தன்னை தொந்தரவுபடுத்துவதாக பாடசாலை அதிபரிடம் ஆசிரியை மார்கா பொட்லைன் (Marka potline) முறைப்பாடு செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையின் பின்னர் மேற்படி விடயம் அம்பலமாகியிருந்தது.
மார்கா பொட்லைன் (Marka potline) மற்றும் மாணவனின் தொலைபேசிகளை அதிகாரிகள் ஆராய்ந்த போது ஆபாசமான படங்கள் பரிமாறப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
தகாத வகையிலான படங்கள், வீடியோக்களை தான் மேற்படி மாணவனுக்கு அனுப்பியதாகவும் அம்மாணவனுடன் தகாத முறையில் உறவு கொண்டதாகவும் மார்கா பொட்லைன் (Marka potline) ஒப்புக்கொண்டார்.
அவருக்கு அதிகபட்சமாக ஆயுட்காலத் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருந்தது. குறைந்தபட்சம் 20 வருட சிறைத்தண்டனை விதிக்ககப்பட வேண்டும் என வழக்குத்தொடுநர்கள் கோரினர்.
எனினும் அவர் 60 நாட்கள் மாத்திரம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
இந்நிலையில், அண்மையில் அவர் குழந்தையொன்றை பிரசவித்ததால் 2023 ஜூன் 5 ஆம் திகதிவரை சிறைக்குச் செல்லத் தேவையில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்படி குழந்தைக்கு குறித்த மாணவன் தந்தை அல்ல என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.