13 வயது மாணவனுடன் தகாத உறவு கொண்ட ஆசிரியை!

0
784

32 வய­தான மார்கா பொட்லைன் (Marka potline) எனும் யுவதி டெக்ஸாஸ் மாநி­லத்­தி­லுள்ள பாட­சா­லையில் ஆசி­ரி­யை­யாக பணியாற்றியுள்ளார்.

இவர் 13 வய­தான மாண­வ­னுடன் வகுப்­ப­றையில் வைத்து தகாத முறையில் உறவு கொண்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மா­ணவன் 13 வயது சிறு­வ­னாக இருந்­த­போது ஆசி­ரியை ­துஷ்­பி­ர­யோகம் ஆரம்­பித்­த­தா­கவும் 3 வருடகாலம் இது தொடர்ந்­த­தாகவும் நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.

பாட­சாலை வகுப்­ப­றை­யிலும் ஆசி­ரியை தன்­னுடன் தகாத முறை உறவில் ஈடு­பட்­ட­தாக அதி­கா­ரி­க­ளிடம் அம் மாணவன் தெரிவித்திருந்தார். மேற்­படி மாண­வ­னுக்கு தற்­போது 16 வய­தா­கு­கி­றது.

13 வயது மாணவனுடன் ஆசிரியை செய்த காரியம்; வெளியான அதிர்ச்சித் தகவல்! | The School Community Was Shocked By What Was Done

மேற்­படி ஆசி­ரியை விவா­க­ரத்து செய்த பின்னர் அம்­மா­ணவன் வசித்த குடி­யி­ருப்புத் தொகு­தியில் மார்கா பொட்லைன் (Marka potline) குடி­யே­றி­யி­ருந்துள்ளார்.

முன்னாள் மாணவன் ஒருவன் தன்னை தொந்­த­ர­வு­ப­டுத்­து­வ­தாக பாட­சாலை அதி­ப­ரிடம் ஆசி­ரியை மார்கா பொட்லைன் (Marka potline) முறைப்­பாடு செய்­தி­ருந்தார். இது தொடர்­பான விசா­ர­ணையின் பின்னர் மேற்­படி விடயம் அம்­ப­ல­மா­கி­யி­ருந்­தது.

மார்கா பொட்லைன் (Marka potline) மற்றும் மாண­வனின் தொலை­பே­சி­களை அதி­கா­ரிகள் ஆராய்ந்­த­ போது ஆபா­ச­மான படங்கள் பரி­மா­றப்­பட்­டி­ருந்­தமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

தகாத வகை­யி­லான படங்கள், வீடி­யோக்­களை தான் மேற்­படி மாண­வ­னுக்கு அனுப்­பி­ய­தா­கவும் அம்­மா­ண­வ­னுடன் தகாத முறையில் உறவு கொண்­ட­தா­கவும் மார்கா பொட்லைன் (Marka potline) ஒப்­புக்­கொண்டார்.

13 வயது மாணவனுடன் ஆசிரியை செய்த காரியம்; வெளியான அதிர்ச்சித் தகவல்! | The School Community Was Shocked By What Was Done

அவ­ருக்கு அதி­க­பட்­ச­மாக ஆயுட்­காலத் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட வாய்ப்­பி­ருந்­தது. குறைந்­த­ப­ட்சம் 20 வருட சிறைத்­தண்­டனை விதிக்­க­கப்­பட வேண்டும் என வழக்குத்தொடுநர்கள் கோரினர்.

எனினும் அவர் 60 நாட்கள் மாத்­திரம் சிறைத்­தண்­டனை அனு­ப­விக்க வேண்டும் என தீர்ப்­ப­ளித்­தது.

இந்­நி­லையில், அண்மையில் அவர் குழந்தையொன்றை பிரசவித்ததால் 2023 ஜூன் 5 ஆம் திகதிவரை சிறைக்குச் செல்லத் தேவையில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்படி குழந்தைக்கு குறித்த மாணவன் தந்தை அல்ல என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.