வவுனியாவில் வாய்த்தர்க்கம் மோதலானதில் காதை இழந்த நபர்!

0
444

வவுனியா வீரபுரம் சின்னத்தன்பனை பகுதியில் இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் மற்றைய நபர்களின் ஒருவரைிக் காதை கடித்து துண்டாக்கியுள்ளார்.

நேற்று (04) இரவு 7.30 மணியளவில் இரு தரப்பினருக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதில் ஒர் இளைஞர் மோதலில் ஈடுபட்ட நபர் ஒருவரின் காதை கடித்து துண்டாக்கியுள்ளார்.

தலையில் வாள்வெட்டு ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.